siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 ஆகஸ்ட், 2012

பல்கலை. விரிவுரையாளர்கள் போராட்டத்தினால் இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BYrajah.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரச்சினைக காரணமாக இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இசட் புள்ளி சர்ச்சைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், விரிவுரையாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக மாணவர்களை சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக அதிகளவில் மாணவர்களை இணைப்பது தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது