,
வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012,
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகளவான போதைப் பொருள் வர்த்தர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, வர்த்தகம் பெண்களின் கைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பெண்களே மேற்கொண்டு வருகின்றனர். பாதாள உலகக் குழுத் தலைவர்களின் மனைவியர், சகோதரிகள் உள்ளிட்ட பெண்கள் இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
கொழும்பை மையமாகக் கொண்டே போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிலர் நாள்தோறும் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வர்த்தகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியானதும் நிதி ரீதியானதுமான லஞ்சங்களை வழங்கி இந்தப் பெண் போதைப் பொருள் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்
பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பெண்களே மேற்கொண்டு வருகின்றனர். பாதாள உலகக் குழுத் தலைவர்களின் மனைவியர், சகோதரிகள் உள்ளிட்ட பெண்கள் இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
கொழும்பை மையமாகக் கொண்டே போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிலர் நாள்தோறும் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வர்த்தகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியானதும் நிதி ரீதியானதுமான லஞ்சங்களை வழங்கி இந்தப் பெண் போதைப் பொருள் வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments:
கருத்துரையிடுக