siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 30 நவம்பர், 2013

எச்.ஐ.வி ஆராய்ச்சிக்காக மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கீடு

 
எச்.ஐ.வி எனப்படும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்துவதற்காக கனடிய அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து கனடிய சுகாதாரத் துறை அமைச்சர் றொனா அம்ப்றோஸ் கூறுகையில், எச்.ஐ.வி-யை குணப்படுத்துவதற்காக அரசாங்கம் 10.7 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 5 ஆண்டுத் திட்டங்களுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆராய்ச்சி நிலையமானது கிட்டத்தட்ட 8.7 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71,000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஜனவரி 22ல் சிரியா அமைதி பேச்சுவார்த்தை


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனீவாவில் ஜனவரி 22-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்-கீ-மூன் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானுடன் 6 நாடுகள் ஒப்பந்தம்: சர்வதேச கச்சா எண்ணை விலை குறைவு


ஈரான் நாட்டுடன் ஜெனிவாவில் நடந்த 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அணு சக்தி குறித்து ஒரு  புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்துசர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டாலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும்,

இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்தியக் கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது என்று கூறப்படுகிறது.




 

ஈரானுடனான ஒப்பந்தம்: நெதன்யாகுவுடன் ஒபாமா பேச்சு


ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, அந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுப் பிழை என்றும், அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக்கொள்ள அது வழிவகை செய்யும் என்றும் பிரதமர் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால், மிக நெருக்கமான நட்பு நாடுகளான அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் பதற்றம் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் அதிபர் ஒபாமா.

வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “”ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒருமித்த கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.

ஈரானில் பூமியதிர்வு; 8 பேர் உயிரிழப்பு


ஈரானில் இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு ஈரானிலுள்ள அணு மின் நிலையத்திற்கு அருகில்  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகியுள்ளதுடன், மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கேள்விப்பட்டு கவலையடைந்துள்ள ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்

வியாழன், 28 நவம்பர், 2013

ஜேர்மன் அரண்மனையில் பற்றி எரிந்த தீ

ஜேர்மன் நாட்டில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த ரெனேசான்ஸ் அரண்மனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ரெனேசான்ஸ் அரண்மனையாது பல்லாயிரம் யூரோக்களால் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்தாகும்.
இந்த அரண்மனையாது சரியான முறையில் பராமரிக்கப்படாததால் 1956ம் ஆண்டு பள்ளிக்கூடமாக சோவியத் ராணுவத்தினரால் மாற்றப்பட்டது.

பின்னர் 1971ம் ஆண்டு அரண்மனையில் சீரமைப்பு பணிகள் நடந்தபோது அருங்காட்சியாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் 100 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்களால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
மேலும் இவர்களில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி நீக்கம் - தேர்தலில் போட்டியிட தடை


வரி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அவர், நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதத்தின்போது பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் சிலர், அவரை நெல்சன் மண்டேலாவுக்கு இணையாகப் புகழ்ந்தாலும் அவரது நீக்கம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பின்னர் தனது இல்லத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பெர்லுஸ்கோனி, இது ஜனநாயக துக்கநாள் என்று விமர்சித்ததுடன் தனது போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்தார்.
   
இந்த நீக்கத்தின்மூலம், 3 முறை பிரதமர் பதவியை வகித்துள்ள பெர்லுஸ்கோனி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அவர் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இருப்பினும் கைதுக்கு வாய்ப்பில்லை என அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 

புதன், 27 நவம்பர், 2013

56 தாய்மார்கள் படுகொலை! பாகிஸ்தானில் பயங்கரம்

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்திற்காக 56 தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதன்படி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தகவலை மனித உரிமைகள் ஆர்வலர் ஐ.ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சில் 90 வழக்குகளும், உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 72 வழக்குகளும், குடும்ப வன்முறையில் 491 வழக்குகளும், கற்பழிப்பு வழக்கில் 344 வழக்குகளும் மற்ற வன்முறை சம்பவங்களில் 835 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

செவ்வாய், 26 நவம்பர், 2013

கனடாவில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கனடாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தில் சீர்திருத்த ஆராய்ச்சியாளர் Howard Sapers சமர்பித்த அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், சிறுபான்மை இனத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், 12,000 என்ற எண்ணிக்கையில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 15,000ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசி பூர்விக குடிமக்களின் தொகை 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது, கருப்பினத்தை சேர்ந்த மக்களும் இதில் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் கடுங்காவல் தண்டனைக்குட்பட்டவர்கள், பிணையில் கூட வெளிவர தகுதி இல்லாதவர்கள்.

2,700 புதிய சிறைச்சாலை அறைகள் கட்டப்பட்டும், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
கணக்கெடுப்பின்படி கனடா அரசாங்கம் ஆண்டுக்கு ஆண் கைதி ஒருவருக்கு 1,10,000 டொலர்களும், பெண் கைதிக்கு 2,20,000 டொலர்களும் செலவழிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இஸ்லாத்திற்கு தடை விதித்தோமா? விளக்கம் அளித்த அங்கோலா

 இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மசூதிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் நீதி மற்றும் மனித உரிமை அமைச்சகம் இஸ்லாத்தை சட்டப்படி ஏற்றுக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை என்று அங்கோலாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இ சில்வா கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியதாக ஆப்பிரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வந்தன.
இந்நிலையில் இது குறித்து வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர், மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா.

எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது, கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.
எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.