siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

மாத்தளை பஸ் வண்டி விபத்தில் 15 பேர் காயம்

23.08.-2012.கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயடைந்த 15 பேரும், ஆபத்தான நிலையில் இருந்த பஸ் வண்டியின் சாரதியும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் மாத்தளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி கண்டியில் இருந்து மாத்தளைக்கு செல்லும் போதே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கும் மாத்தளை பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்