siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

தாய்லாந்தில் RE-ENTRY கொடுத்திருக்கும் அலெக்ஸ் என்னும் குகேந்திரராஜா

23.08.2012.2009ம் ஆண்டு 254 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கிச் சென்ற கப்பல் இந்தோனேசியப் படையினரால் பிடிக்கப்பட்டது. இக் கப்பலில் இருந்து தாம் தரைக்கு இறங்கப்போவது இல்லை என தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை இவர்களுக்காகப் பேச அலெக்ஸ் என்னும் நபர் முன்வந்தார். இதேவேளை சர்வதேச தொலைக்காட்சிகள் அவரை நேர்காணல் கண்டவேளை, நிகழ்ச்சி தயாரிப்பாளரை விட படு கெட்டித்தனமாக ஆங்கிலம் பேசினார் அலெக்ஸ். அவரது ஆங்கிலப் புலமை கனேடிய பேச்சு வழக்கில் இருந்ததால், அவர் யார், ஏன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட கப்பலில் ஏறினார் என்பதுபோன்ற கேள்விகள் எழுந்தது. பின்னர் அவர் கனடா நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் என்று அறியப்பட்டது. இதேவேளை இவர் தான் அனைவரையும் கடத்திச் சென்ற ஏஜன்சி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

அதுவரை காலமும் தான் தான் அகதிகளின் பேச்சாளர் என்ற நிலையில் இருந்த அலெக்ஸ், இரவோடு இரவாக இந்தோனேசியாவில் இருந்து மர்மமாக மறைந்தார். அதன்பின் அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பதுபோன்ற விடையங்கள் தெரியாது அகதித் தமிழர்கள் குழம்பிப்போய் இருந்தனர். அகதிகளாக இருந்த தமிழர்கள், அலெக்ஸ் தங்களை சங்கடத்தில் மாட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், இவரால் தான் எல்லாப் பிரச்சனைகளும் தலைதூக்கியதாகவும் முன்னர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்திருந்தனர்.

தற்போது தாய்லாந்து நாட்டில், இவர் தலைதூக்கியுள்ளார் என அன் நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தான் இந்தோனேசியாவில் இருந்து எவ்வாறு தப்பினேன், நடந்தது என்ன என்று பக்கம் பக்கமாகக் கதைசொல்லியிருக்கிறார் அலெக்ஸ். தமிழ் நாட்டில் உள்ள பாதிரியார் காஸ்பர் புலுடா விடுவதுபோல இவர் தனது அனுபவங்கள் என்றுகூறி பல செய்திகளை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்