siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணிக்கையில் உயர்வு

.BY,rajah.திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012,தமிழர்களுக்கு நிகராக சிங்களவர்களும் அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி படகு பயணங்களை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் 1076 இலங்கை அகதிகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 35 சதவீதமானவர்கள் சிங்களர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வெளிநாட்டினரும் இதில் உள்ளடங்குகின்றனர். இதேவேளை இந்த அகதிகளின் குழுவில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, நீர்கொழும்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக மீன்பிடி படகுகளை பயன்படுத்தி அகதிகளாக தப்பி செல்கின்றனர்