siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

காரைக்காலில் கருட பஞ்சமி: 7 பெருமாள்கள் வீதியுலா



 
24.07.2012
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் கருட சேவையில் ஒருசேர எழுந்தருளிய உற்சவர்கள்.
காரைக்கால், ஜூலை 23: கருட பஞ்சமியையொட்டி, காரைக்காலில் 7 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் திங்கள்கிழமை காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி, மகா தீபாராதனைக்குப் பின்னர் வீதியுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாத பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் ஆகிய 6 பெருமாள்கள் காரைக்கால் நகருக்கு பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர்.
காரைக்கால் வந்த பெருமாள்களை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, 7 பெருமாள்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.
மாலை சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி,திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், எல்லா பெருமாள்களும் காரைக்கால் அம்மையார் குளக்கரையில் ஒருசேர எழுந்தருளினர்.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இரவு கருட சேவை புரிந்த பெருமாள்களின் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான நிர்வாகம், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்திருந்தனர்

0 comments:

கருத்துரையிடுக