siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

தாவடியில் குறைமாத சிசுவைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த கணவன், மனைவி கைது

 _
24.07.2012தாவடி நந்தாவில் வீதியில் குறை மாதப் பிள்ளையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த குற்றச்சாட்டில் ஓர் இளம் பெண்னையும் அவருடைய கணவன் எனக் கூறப்படுபவரையும் கைது செய்துள்ளார்கள்.

தாவடி தெற்கு நந்தாவில் ஒழுங்கையில் வசிக்கும் கணவன்-மனைவியே கைது செய்யப்பட்டவர்களாவர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிக இரத்தப் பெருக்குக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பி;ட்ட பெண் ஏற்கனவே திருமணம் செய்து முதல் கணவன் மன நோயாளியான நிலையில் இரண்டாவதாக குறிப்பிட்ட நபரைத் திருமணம் செய்து வாழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது இரண்டாவது கணவர் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைக்காவலர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்

0 comments:

கருத்துரையிடுக