siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 ஜூலை, 2012

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது


..
24.07.2012.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் நந்தன வருடம் 24.07.2012 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 26 நாள்களுக்கு பெருந்திருவிழா மிகவும் சிறப்புடன் பக்திப் பரவசத்துடன் இடம்பெறவுள்ளது.

24 ஆம் திகதிஇன்று   (செவ்வாய் கிழமை) காலை வி...சேட பூசை அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, அந்தணர்களின் வேதபாராயணம் காற்றுடன் பரந்து சங்கமிக்க, நாதஸ்வர தவில் கான மழை சொரிய பூக்கள் காற்றில் பறந்து கொடிச்சீலையை தழுவிச் செல்ல பூலோக கைலாசத்தில் கொடியேற்றப் பெருந்திருவிழா இடம்பெறவுள்ளது.

இனிதே ஆரம்பமாகி 26 தினங்கள் தொடர்ந்து இடம்பெறும். திருவிழாக்கள் விவரம்

*24.07.12 செவ்வாய்க் கிழமை கொடியேற்றம் பகல் 10-00
*02.08.12 வியாழக்கிழமை--- மஞ்சம் மாலை 5-00
*10.08.12 வெள்ளிக்கிழமை--- கார்த்திகை உற்சவம் மாலை 5-00
*12.08.12 ஞாயிற்றுக்கிழமை-- சந்தானகோபாலர் உற்சவம் காலை 7-00
*12.08.12 ஞாயிற்றுக்கிழமை--- கைலாசவாகனம் மாலை 5-00
*13.08.12 திங்கள் கிழமை--- கஜவல்லிமஹாவல்லி உற்சவம் காலை 7-00
*13.08.12 திங்கள் கிழமை--- வேல்விமானம் மாலை 5-00
*14.08.12 செவ்வாய்க் கிழமை--- தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7-00
*15.08.12 புதன் கிழமை சப்பரம்--- மாலை 5-00
*16.08.12 வியாழக் கிழமை தேர்--- காலை 7-00
*17.08.12 வெள்ளிக்கிழமை--- தீர்த்தம் காலை 7-00
*18.08.12 சனிக்கிழமை பூங்காவனம்--- மாலை 5-00
*19.08.12 ஞாயிற்றுக் கிழமை வைரவர்--- உற்சவம்

பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார, பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டும்.

ஆலய வீதியில் முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு, பொலிஸார் பிரிவு, சரணர் பிரிவு, பத்தர்கள் தொண்டு அமைப்புக்கள் என பலதரப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தை சூழவுள்ள மண்டபங்களில் விசேடநிகழ்வுகள் இடம்பெறக் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க

0 comments:

கருத்துரையிடுக