siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நயன்தாராவுடன் மீண்டும் காதலா? – சிம்பு விளக்கம்

08.08.2012.

நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள்.
நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து நலம் விசாரித்தப்படி பேசத்துவங்கியதும், மற்ற நடிகர்கள் அவர்களை விட்டு ஒதுங்கினார்கள். நீண்டநேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
பிரபுதேவாவுடனான காதலை நயன்தாரா முறித்துள்ள நிலையில் சிம்புவை அவர் சந்தித்து பேசியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே உடைந்து போன காதலை அவர்கள் புதுப்பித்துக் கொண்டதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டனர். அப்படத்துக்காக நயன்தாராவின் உதட்டை சிம்பு கடிப்பது போன்று சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதன்பிறகு திடீரென தகராறு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர் களாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் காதல் என்று சொல்வது முட்டாள்தனமானது. நாங்கள் நடிகர்களாக உள்ளோம். ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கிறோம். நட்பையும் பகிர்ந்து கொள்கிறோம். சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசிக்கொள்கிறோம். அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சிம்பு கூறினார்

0 comments:

கருத்துரையிடுக