siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அமெரிக்கா சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு: பலரின் உயிரை காப்பாற்றிய குழந்தைகள்

 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவின் விஸ்கோசின் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது குழந்தைகள் இருவர், பலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்குள் இருந்த குழந்தைகள் 2 பேர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஆலயத்திற்குள் நுழைவதையும், அவர் சுடத் தொடங்கியதையும் பார்த்துள்ளனர்.
பயத்தில் குழந்தைகள் இருவரும் கத்தியுள்ளனர். இவர்களின் அலறலை கேட்ட பலர் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளனர்.
குழந்தைகள் சத்தமிட்டு எச்சரிக்கை கொடுத்து, பலரின் உயிரையும் காப்பாற்றியதை பலரும் பாராட்டி உள்ளனர்.
அதேசமயம் குழந்தைகள் இருவரையும் சரக்குகள் வைக்கும் அறைக்குள் இழுத்தச் சென்ற ஜஸ்கிரண் கவுர் என்ற பெண், அவ்வறையை பூட்ட முடியாததால் யாரும் உள்ளே வராதபடி கதவை தாங்கி பிடித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் அவரின் கையிலும் குண்டடிபட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக