siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மட்டக்களப்பில் வான் ஒன்று மோதியதில் டென்மார்க் நாட்டு பெண் படுகாயம்!

 
 செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இன்று காலை வெளிநாட்டு பெண் ஒருவருடன் வான் ஒன்று மோதியதில் அவ் வெளிநாட்டு பெண் காயமடைந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டுக் பெண் காத்தான்குடி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த போது வான் ஒன்று இந்த பெண்ணுடன் மோதியதில் குறித்த வெளிநாட்டுப் பெண் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த வெளிநாட்டுப் பெண் டென்மார்க் நாட்டை சேர்ந்த செல்வி மிக்கியாகும்.
இவர் காத்தான்குடி பிரதேசத்தில் பெண்கணுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் பெண்களுக்கான இலவச ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வருகின்றார்.
இவர் மட்டக்களப்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக