siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மகிழ்ச்சியில் மாற்றான் டீம்! சோகத்தில் கே.வி. ஆனந்த்!

07.08.2012.

கே.வி.ஆன்ந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. மாற்றான் படத்தின் சில நிமிட டிரெய்லரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், மாற்றான் படத்தின் பாடல்கள் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ள கே.வி.ஆனந்த், இதுவரை சூர்யாவின் படங்களில் நடித்த ஹீரோயின்கள் அனைவரையும் விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
த்ரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ருதிஹாஸன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான நடிகைகள் விழாவிற்கு வருகை தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்களாம். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் கண்டிப்பாக வருவார்களாம். மாற்றான் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசைநிகழ்ச்சி நடத்தவிருப்பதாக தெரிகிறது.
மேலும் பல நடிகைகளும், வெளிநாட்டு நடனக்கலைஞர்களும் நடனமாடுகிறார்களாம். மாற்றான் பட இசை வெளியீட்டு விழா ஒரு பிரம்மாண்ட நட்சத்திர திருவிழாவாக நடக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாற்றான் படக்குழு மற்றொரு சோகமான செய்தியையும் கூறுகிறது.
ஆடியோ ரிலீஸ், படம் ரிலீஸ் என பல வேலைகளில் தீவிரமாக ஈட்பட்டுக்கொண்டிருந்த கே.வி.ஆனந்தின் மூட்அவுட் தான் அந்த சோகமான செய்தி. சமீபத்தில் வெளிவந்த ஒரு வார இதழில் மாற்றான் “காப்பிபடம்’’ என வெளிப்படையாகவே செய்தி வந்திருந்தது தான் கே.வி.ஆனந்திற்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது.
மாற்றான் படத்தைப் பற்றி பலதரபட்ட செய்திகள் வந்தாலும் “இது காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் அல்ல” என்று திட்டவட்டமாக மறுத்துவரும் கே.வி.ஆனந்த் படிக்க தெரிந்தது முதல் வாசகனாக இருக்கும் தனது ஃபேவரிட் பத்திரிகையிலேயே இதுபோன்ற செய்தி வந்ததால் அதை மறுத்து தன்நிலை விளக்கி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஆரம்ப முதலே சொல்லிவருவது போல ”புத்தகத்தில் படித்த கதாபாத்திரங்கள் எனது கதையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றனவே தவிர இது வேறு ஒருவரின் கதை அல்ல” என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக