siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மனிதர்களைத் தின்னும் சுறாமீன்களை பிடிக்க உத்தரவு

09.08.2012.
பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் காணப்படும் மனிதர்களை தின்னும் Bull Shark சுறாக்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரி புரூனெட்டியர் கூறுகையில், தொழில் ரீதியாக சுறாமீன்களை பிடிப்பவர்களையே இதற்கு நியமிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, இவர் உள்நாட்டு அரசியல்வாதிகளையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5ஆம் திகதி சுறா மீன் தாக்குதலில் ஒருவரது வலது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த இருபது மாதங்களில் குறைந்தது 8 பேர் சுறா மீனின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக