siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

நேட்டோ விமானத்தளத்தில் உளவு பார்த்தவர் கைது

09.08.2.12.
ஜேர்மனியின் ராம்ஸ்டீன் பகுதியில் உள்ள நேட்டோ விமானத்தளத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 60 வயது முதியவர் ஒருவர் உலாவியதன் காரணமாக அவரை பொலிஸார் கைது செய்தனர். மான்ஃபிரெட் கே என்ற பெயருடைய இவர், இராணுவ ரகசியங்களை தனது கணணியில் பதிந்து பின்பு அவற்றை மூன்றாம் நபரொருவருக்கு கடத்தி விடுகிறார் என்ற சந்தேகம் உள்ளது.
ரைன்லேண்ட்- ப்லாட்டினேட்டில் உள்ள மாநில குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் இந்த முதியவரை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மான்ஃபிரேடின் கைது மற்றும் விசாரணை குறித்து நேட்டோவின் செய்தித்தொடர்பாளி கார்மென் ரோமெரோ, நேட்டோ, புலனாய்வு விடயங்களில் எதுவும் நாங்கள் தலையிடுவதில்லை என்று மட்டும் தெரிவித்திருக்கின்றார்

0 comments:

கருத்துரையிடுக