siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

o09.08.2012.
அதிக வரி அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் சிலர் இணைந்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கை, ஹொங்கொங், பேங்கொக், சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 க்கும் அதிகமானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதன்காரணமாக விமான நிலைய மற்றும் சுங்கத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
தாம் கொண்டு வரும் பொருட்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், அதிகப்படியான வரி அறவிடப்படுகின்றமையே ஆர்ப்பாட்டத்திற்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

கருத்துரையிடுக