siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தொடர் வறட்சியால் கால்நடைகள் இறப்பு; உரிய நேரத்தில் குளங்கள் ஆழமாக்கப்படாமையே காரணம்

09.08.2012.
news
உரிய காலங்களில் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு நீர் தேக்கிவைக்கப்படாமையும் குளங்கள் வறண்டு போவதற்குக் காரணம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளை பாதுகாப்பதில் உரிய அதிகாரிகள் காட்டும் அசமந்தப் போக்கே தற்போது வறட்சியால் கால் நடைகள் இறக்கவும் காரணமாகிறது. தீவுப் பகுதிகளிலேயே கால்நடைகளின் இறப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
குறிப்பாக நயினா தீவில் கால்நடைகள் பெரிதும் இறக்கின்றன. அவற்றைப் புதைக்கும் நடவடிக்கைகளில் பிரதேசசபை உப அலுவலகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவுப் பகுதிகளில் மக்களும் குடிதண்ணீர் பெறுவ தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து காணப்படும் நிலையில் நீண்டதூரங்க ளுக்குச் சென்று தண்ணீரைப் பெற்று வருவதையும் காணமுடிகிறது.
பிரதேச சபையினர் பவுசர்கள் மூலம் குடிதண்ணீரை விநியோகித்து வருகின்ற போதும் அது மக்களுக்குப் போதியதாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பருத்தித் துறை பிரதேச செயலர் பிரிவில் வல்லிபுரம் கிராம சேவையாளர் பகுதியில் 14 குளங்களும், துன்னாலை வடக்கு கிராம சேவையாளர் பகுதியில் 2 குளங்களும் வற்றி வறண்டு போயுள்ளன.
இந்தக் கிராம சேவையாளர் பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையான ஆடு, மாடுகள் குடிப்பதற்குத் தண்ணீருக்காக இந்தக் குளங்களை நாடி தண்ணீரின்றி ஏமாந்து செல்கின்றன.
இயற்கையான நீரூற்றுக்களைக் கொண்ட இந்தக் குளங்களே வறண்டு போயுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தக் குளங்கள் ஆழமாக் கப்பட்டு புனரமைக்கப்பட் டால் நீர் ஊறிக்கொண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு. கடந்த கால வறட்சிக் காலங்களின் போது இந்தக் குளங்களில் தண்ணீர் இருந்தது என இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயத்தை உரிய அதிகாரிகள் இனிவரும் காலங்களிலாவது கவனத்தில் எடுத்து நீர் நிலைகளைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர். இந்த வருட மழை காலத்துக்கு முன்னர் குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது.
இல்லாது போனால்

0 comments:

கருத்துரையிடுக