siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

'வை திஸ் கொல வெறி" : சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

09.08.2012.சுகாதார அமைச்சுக்கு முன்பாக வை திஸ் கொலவெறி என்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சுகாதார சேவைகள் தொழிற்சங்கள் பல ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தன.

சுகாதாரத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மீள சேவையில் அமர்த்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஓய்வு பெற்ற முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் அமர்த்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றமை பாரதூரமான குற்றமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

சுகாதாரத் துறையில் தொடர்ந்து இடம்பெற்ற சில ஊழல் மோசடிகள் குறித்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அவர் ஏன் மீண்டும் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி விசாரணைக்குழுவினரால் நடத்தப்பட்ட விசாரணையிலும் முன்னாள் சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறித்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினர்.

எனவே சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக தகுதியுடைய ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு சுகாதாரத் துறையின் ஊழல்களுக்கு எதிரான ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக