siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கறுப்பின வாலிபருடன் உறவு வைத்திருந்த மகளை தாக்கிய பெற்றோருக்கு சிறை

09.08.2012.
இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது,

வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17).
England

ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

நெகுபே கறுப்பினத்தைச் சேர்ந்தவர்.

இதன்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதேவேளை அங்கு வந்த ஜேனின் பெற்றோர் தங்களது மகள் நிர்வாண நிலையில் தனது காதலருடன் இருப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளனர்.

இதையடுத்து தந்தை டேவிட், கோபத்துடன் மகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக அடித்துள்ளார். தாயாரும் சேர்ந்து அடித்துள்ளார். இதைத் தடுக்க வந்த அல்போன்ஸையும் டேவிட் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கறுப்பினத்தவருடன் உறவு வைத்து குடும்பக் கெளரவத்தைக் கெடுத்து விட்டாயே என்றும் ஜேனை திட்டியுள்ளார் டேவிட். நெகுபேயைப் பார்த்தும் இனவெறி கருத்துக்களைக் கூறியுள்ளார்.

பெற்றோர் கோபமாக இருந்ததால் ஜேன் வீட்டை விட்டு வெளியேறி தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் டேவிட்டும், அவரது மனைவியும் மகளிடம் நெகுபேயை தொடர்ந்து சந்திக்கிறாயா? என கேட்டுள்ளனர்.

அதற்கு ஜேன் ஆம் என்று கூறவே கோபமடைந்த பெற்றோர் மீண்டும் அவரை அடித்துள்ளனர். இதில் ஜேனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
England2


இதனையடுத்து டேவிட் மற்றும் அவரது மனைவி மீது பொலிஸா வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் தம்பதியரின் செயலையும், நெகுபே குறித்து இனவெறி கருத்துக்களைக் கூறியதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர்களின் செயல் இழிவானது என விமர்சித்த நீதிபதி, டேவிட் செம்பியனுக்கு 12 மாத சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு 9 மாத சிறைத் தண்டனையும் விதித்தார்

0 comments:

கருத்துரையிடுக