புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, |
இதனால் இங்குள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினாலும், மூலப்பொருட்கள் கிடைக்காததாலும் மருந்து நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளன. போதிய மருந்துகள் கிடைக்காததாலும், தொடர் சண்டையினால் கட்டிடங்கள் சேதமடைந்ததாலும் சில மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நீரிழிவு, புற்றுநோய், மஞ்சள் காமாலை, வயிற்று போக்கு, காசநோய், சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல மாதங்களாக நடக்கும் சண்டையால் சிரியாவின் சுகாதாரத் துறைக்கு சொந்தமான, 200 ஆம்புலன்சுகள் சேதமடைந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்து விட்டதால் உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிரியாவிலிருந்து, 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
சிரியாவில் மருந்துகள் இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள்: மக்களின் உயிருக்கு ஆபத்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக