siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்புகேட்ட இயக்குனர்!

09.078.2012.

சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த பில்லா-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதே பலரின் கருத்து. பில்லா-2 அஜித் ரசிகர்களுக்காகவே செய்யப்பட்ட குல்லா எனவும் பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதப்பட்டன. அஜித்தின் நடிப்பை பாராட்டும் ரசிகர்கள் அஜித்தை சரியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை என்பதே அவர்களின் வேதனையாக இருந்தது.
பில்லா-2 ரிலீஸாகி சில நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது. தமிழ்நாட்டின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூல் சாதனையையும் செய்த பில்லா-2 படத்தின் இயக்குனர் சக்ரி டொலட்டி ரசிகர்களே ஆச்சர்யப்படும் வகையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பில்லா-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக்ரி டொலட்டி “பில்லா-2 பார்த்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படம் பிடிக்காதவர்கள் என்னை மன்னித்துவிடுங்கள். முக்கியமாக ‘தல’ ரசிகர்கள் என்னை மன்னிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் இப்போது விஷ்ணுவர்தன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பாக மும்பை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து மறுபடியும் மும்பை செல்கிறது.
விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கை தீவிரமாக கவனித்து வரும் திரையுலகம் இந்த வருடத்திலேயே அஜித்குமாரின் அடுத்த படம் ரிலீஸாகிவிடுமா? என ஆச்சர்யத்தில் உள்ளது

0 comments:

கருத்துரையிடுக