siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 செப்டம்பர், 2012

களுத்துறை சிறைச்சாலை பின்புறம் போதைப்பொருள், சட்டவிரோத பொருட்கள் பொலிஸாரால் மீட்பு

1.09.2012.BY.rajah.
களுத்துறை மாவட்ட சிறைச்சாலையின் மதிலுக்குப் பின்புறமாக சுமார் 5இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் சட்டவிரோத பொருட்களும் உள்ளடங்கிய பொதியொன்று நேற்று அதிகாலை 04.30மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதியினுள் கஞ்சா 560 பைக்கெற்றுகள், கோலிப் சிகரட் பைக்கெற் தலா01 , 06 பாபுல் பைக்கெற்றுகள் ,போத்தலிலே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெரிய கஞ்சா பைக்கெற் 28 ,03 கையடக்கத் தொலைபேசிகள்(செருப்புக்களிலே அறைக்கட்ட உள்ளிட்டபொருட்கள் )உள்ளிருக்கும் சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக பறிமாறிக் கொள்கின்றனர்.


இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து அமைச்சர் இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளயர் நாயகம் பிரதீப் கொடுப்பிலியுடன் பேசி குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.