siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 செப்டம்பர், 2012

நீலாவணை களப்பிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

01.09.2012.BY.rajah.மட்டக்களப்பு நீலாவணை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து இன்று மாலை இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வினோ (22 வயது ) மற்றும் ஏட்டின் ( 22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் களப்பில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் கல்முனை எங்கும் கவலையில் ஆழ்ந்துள்ளது. சடலங்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்