siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 1 செப்டம்பர், 2012

யாழில் கப்பம் கோரி இருவர் கடத்தல்; காவற்றுறையினரால் மீட்பு, சந்தேக நபர் இருவர் கைது

01.09.2012.BYrajah.யாழ் நகரை அண்டிய பகுதி ஒன்றில் கப்பம் கோரி தாயையும் அவரது இரண்டு வயது மகனையும் கடத்திய இருவர் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதி அருகாமையில் வைத்தே இருவரும் கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காகவே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் புலன் விசாரணைகளை மேற்கொண்டு கணவன் - மனைவி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தாயையும் மகனையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

கப்பம் கேட்டு கடத்திய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்