siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது

  _
27.07.2012அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தயான் அந்தனி ௭ன்ற இலங்கையர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு ௭திராக 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக