siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 27 பிப்ரவரி, 2013

சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்,,,

அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார். நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார்....

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மின் நிலையத்தில் திடீர் கோளாறு: இருளில்,,,

  பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்சார தடை ஏற்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.குறிப்பாக ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவர், ஐதராபாத், குவெட்டா ஆகியவை இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள 1,200 மெகாவாட் தனியார் அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். பின்னர் இஸ்லாமாபாத் மின் துறையினர் மாற்று ஏற்பாடுகள் செய்து இஸ்லாமாபாத் உள்பட சில...

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மருத்துவராக ஆங்கிலம் அவசியம்: பிரிட்டன் ?

பிரிட்டனில் பொதுமருத்துவராகப் பணிபுரிய நோயாளிகளின் கருத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் அவசியம் என்ற உத்தரவை அரசு உறுதி செய்துள்ளது.அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர் டேனியல் உபானிக்கு(Daniel Ubani) ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளித்தன்மூலம் லீட்ஸ் பிரைமரி கேர் அறக்கட்டளை நடத்திய மருத்துவமனை இவரை வெளியேற்றியுள்ளது. இனி இதுபோன்று நடக்க கூடாது என்பதால் ஆங்கிலம் தெரியாத மருத்துவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படும்...

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நிர்வாணமாக போஸ் கொடுத்த தாய்மார்கள்

குழந்தைகளின் பள்ளிப்பேருந்தை காப்பாற்றுவதற்காக தாய்மார்கள் நிர்வாணப் போஸ் கொடுத்துள்ள சம்பவம் ஸ்பெயினில் நடந்தேறியுள்ளது.ஸ்பெயினின் மான்ட்செர்ராட் நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் பெருகி வரும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிப் பிள்ளைகளுக்கான பேருந்து சேவையை குறைத்தது. இதனால் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதை எதிர்த்து பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பார்த்தனர். ஆனால் நிர்வாகம் இறங்கி வரவில்லை. இதையடுத்து...

சனி, 23 பிப்ரவரி, 2013

நினைவு நிகழ்வில் உயிரை விட்ட கணவன். .

மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன்(வயது 94) இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி குவண்டோலின் (வயது 89), பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர். பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அணுசக்தி உபகரணங்களை ஈரான் நிறுவுகிறது

ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகள் கூறி வருகின்றன.உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுதக்குறைப்பு குறித்து வரும் 26ம் திகதி ஈரானுடன் கஜகஸ்தானில் பேசவுள்ளனர். இந்நிலையில் ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் ஒன்றில் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுவதாக ஐ.நா. அணு முகமை எச்சரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூறியிருப்பதாவது: கடந்த 6ம் திகதி, ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில், ஐ.ஆர்.-2எம் செண்ட்ரிபியூசு...

வியாழன், 21 பிப்ரவரி, 2013

கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ,,,

ஸ்மார்ட் போன்களை மிஞ்சும் கூகுள் இணைய கண்ணாடி: நீங்களும் வெல்ல ஒரு வாய்ப்பு கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனம் "இணைய கண்ணாடி"களை 1500 டொலர் விலையில் விற்பனைக்கு விட உள்ளது. இந்தக் கண்ணாடிகள் ஸ்மார்ட் போன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் போன்று அல்லாமல் இது குரல் மூலம் வழங்கும் கட்டளைகளை செயல்படுத்தும். இதனை பயன்படுத்த கைகள் தேவை இல்லை. இதனைக்...

இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய

பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் தலைமையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாலியல் தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 முதல் 35 சதவீதத்தை இவர் பெற்றுக்...

தொடர்ந்தால் வடகொரியா மீது புதியபுதிய தடைகள்: .....

வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்தால் மேலும் சர்வதேச தடைகளை சந்திக்கும் என்று தென்கொரியா ஜனாதிபதி மியூங் பக் எச்சரித்துள்ளார்.தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் இன்னும் சில தினங்களில் ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. இந்நிலையில் லீ மியூங் பக் தனது ஓய்வை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வட கொரியா...

பிரித்தானியா பெண்கள் கொந்தளிப்பு,,

பிரித்தானியாவில் சிறுவனுக்கு காண்டம் விற்ற கடைக்காரருக்கு பெண்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா ஓப்பி, என்பவர் தன் பத்து வயது மகனுக்கு கை செலவுக்கு பணம் தந்தார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருந்து கடைக்கு சென்று திரும்பிய மகனின் கைகளில் 20 ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த எம்மா ஓப்பி, "காண்டம்" விற்ற கடைக்காரரிடம் சண்டை போட்டார். இது குறித்து மருந்து கடைக்காரர் குறிப்பிடுகையில், கடைகளில் எந்த வயதினருக்கு ஆணுறை...

புதன், 20 பிப்ரவரி, 2013

பொருளாதார வளர்ச்சி 12%,,,,,,,,,,

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடந் ஆண்டில் (2012) சுமார் 12 சதவீதத்தினால் வளர்ச்சி கண்டிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.குறைந்த மட்ட (6%) பணவீக்கம் மற்றும் சிறந்ததோர் விவசாய சாகுபடி போன்றதான நிலைமைகள் ஆப்பானிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது ஆப்கானிஸ்தான் போன்று, போருக்குப் பின்னான  இலங்கைப் பொருளாதாரத்தினால் (முன்னரும் கூட) உயர் மட்ட பொருளாதார வளர்ச்சி அல்லது உறுதிப்பாட்டினை...

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

வெந்நீர் ஊற்றிய மனைவி!,,,

கணவன் கள்ளத் தொடர்பு பேணிவருவதை பொறுக்கமுடியாத மனைவியொருவர் அவரது ஆணுப்பின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவமொன்று கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் குறித்து தெரியவருவது,வடகொலம்பியாவின் சிரேடே நகரில் வசித்துவருபவர் யோலிவெல் லோபஸ். இவரின் கணவர் நெபர் நெடான்.சம்பவ தினத்தன்று நெடான் அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்துள்ளதுடன் நண்பர்களுடன் இரவுப்பொழுதைக் கழித்ததாகவும் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.ஆனால் நெடானுடன் கள்ளத்தொடர்பை பேணிவரும் பெண் யோலிவெல் லோப்ஸிற்கு...

நேர்ந்த பரிதாபம்: பிரித்தானியா தம்பதியினர் பலி,,

சைக்கிளில் உலகை வலம் வந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் தாய்லாந்தில் நடந்த சாலை விபத்தில் பலியாயினர்.பிரித்தானியாவைச் சேர்ந்த ஓவியர்கள் பீற்றர் ரூட் (வயது 34) அவரது மனைவி மேரி தாம்சன் (வயது 34) இருவரும் சைக்கிளில் உலகை சுற்றிவர திட்டமிட்டனர். கடந்த 2011ம் ஆண்டில் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இருவரும் ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்ட நாடுகளை கடந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் திகதி, தாய்லாந்தில் பாங்காக் நகரத்தருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த...

திங்கள், 18 பிப்ரவரி, 2013

மாணவர்கள் விளையாடிய கற்பழிப்பு விளையாட்டால் அதிர்ச்சி,,,

பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள், "கற்பழிப்பு விளையாட்டு" என்ற பெயரில் விளையாடிய விளையாட்டு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக "ரேப் கேம்" என்ற பெயரில் வீடியோ கேம் ஒன்று உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கற்பழிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பினாலும் சிலர் அதை ரகசியமாக விளையாடி வருகின்றனர். பிரித்தானியாவின் கிழக்கு சசசெக்ஸ்...

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

பிஸ்டோரியஸ் காதலி கொலை வழக்கில் திருப்பம்.

காதலியைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஓஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்து ரத்தக்கறை படிந்த கிரிக்கெட் மட்டை ஒன்றை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிஸ்டோரியஸ் தனது காதலியான ரீவா ஸ்டீன்கேம்ப்பை காதலர் தினத்தன்று சுட்டுக் கொன்றதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஸ்டோரியஸ் வாக்குமூலத்தில் திருடன் வந்து விட்டான் என்று கருதி சுட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பிஸ்டோரியஸுக்கும், அவரது...

சனி, 16 பிப்ரவரி, 2013

விமான தளத்தை கைப்பற்ற நிகழ்ந்த சண்டையில்,,,

சிரியாவின் அலெப்போவில் அமைந்திருக்கும் சர்வதேச மற்றும் முக்கிய இராணுவ விமான தளத்தை கைப்பற்றுவதற்கு நிகழ்ந்த முற்றுகைப் போரில் கடந்த இரு நாட்களில் மட்டும் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தகவலை பிரித்தனை தளமாக கொண்டு சிரியாவைக் கண்காணிக்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான ராமி அப்துல்-ரஹ்மானும் உறுதிப் படுத்தியுள்ளார். சிரிய கிளர்ச்சிப் படை அலெப்போவின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த புதன்கிழமை...

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பாக்கி ஏந்திய காவல்படையுடன் நடந்த ஜனநாயகத்

வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் தலைநகர் அகர்த்லாவில் உள்ள வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி சாவடியைக் கண்காணிக்கிறார். இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் திரிபுரா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதிக்கும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்து வரும் வேளையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமைதியாக நேற்று வாக்குப்பதிவுகள் நடந்தேறின. ...

மின் உற்பத்தி நிலையத்தை சீனாவுக்கு விற்பனை,,,

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது:,,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நவநீதம்பிள்ளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் 13 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒருதலைப்பட்சமானது.சனல்-4 காணொளி, வவுனியா, வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், புலிகளின்...

காதலர் தின வாழ்த்துக்கள்,,,,

அன்பே! உன் பார்வை பட்டால் போதும் உன் பாதம் தொட்ட இடத்தில்... நான் சாதம் போட்டு சாப்பிடுவேன்..! எல்லா நண்பர்களுக்கும் எனதுகாதலர் தின வாழ்த்துக்கள்,,,காதலிப்பவரை மட்டும் அன்புடன் காதலியுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்க வளர்க வளமுடன் ,,நன்றி ,,,,,, ...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கமலேஸ் சர்மா உறுதியளித்ததாக வெளியான செய்தி பிழையானது

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பரில் இலங்கை கொழும்பில் நடைபெறும் என்பதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தினார் என்று வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவ்வாறான உறுதிமொழி எதனையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்படுமானால் அதனை பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர்...

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள..

< செர்பிய பிரதமரை நேர்காணல் செய்த பெண், உள்ளாடை அணியாத விவகாரம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டிவி' சேனல் ஒன்று, "மிஷன் இம்பாசிபிள்' என்ற பெயரில் வேடிக்கை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. மாடல் அழகியான, ப்ராங்கா நெசிவிக், பிரதமர் இவிகா டேகிக்கை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுநேர்காணலின் போது, உள்ளாடை அணியாமல், குட்டை பாவாடை அணிந்திருந்த அந்த பெண், கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். பேட்டி கண்ட பெண், காலை மாற்றி...

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் ,,,,

முருகதாசன் எனும் ஈழத்து இளைஞன் பெப்ரவரி 12, 2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரிலுள்ள ஐ. நா. அகதிகளுக்கான ஆணையர் அலுவலகத்தின் முன்பு தீயிட்டு தன் இன்னுயிரை தமிழீழ மக்களுக்காக ஈகம் செய்தார். “உலகத் தமிழ் சமூகத்துக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து ஒன்று கூடுங்கள். நம் மக்கள் உரிமைகளை மீட்டிடவும், உலகின் பல்வேறு தேசிய இனங்களின் மனங்களையும், இதயங்களையும் வென்றெடுக்கவும் கைகோர்த்துக் குரலெழுப்புங்கள். இது ஒரு மாபெரும்...

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

மீண்டும் சாலமோன் தீவுகளில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியா அருகே உள்ள சாலமோன் தீவுகளில் மீண்டும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 அலகுகளாக இது பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சாலமோன் தீவுகளில் கடந்த 7ம் திகதி சாண்டா குரூஷ் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டரில் 8 அலகுகளாக இது பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாயினர். 13 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்...

நாய்களுக்கு மைக்ரோசிப்: அரசு அதிரடி உத்தரவு

பிரிட்டனில் உள்ள அனைத்து நாய்களுக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என அரசு திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் நாய்களை செல்லபிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நாய்கள் கடித்து பலர் உயிரிழக்கின்றனர். இதற்கிடையே நாய்கள் அதிகளவு திருட்டு போகின்றன. எனவே எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாய்களின் கழுத்துபட்டையில் மைக்ரோசிப் பொருத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நாயின் உரிமையாளர்...

சனி, 9 பிப்ரவரி, 2013

செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள்

  ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை...

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சாலமன் தீவில் மீண்டும் நிலநடுக்கம்

சுனாமியின் கோரத் தாண்டவத்தில் சாலமன் தீவில் ஐந்து கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கம் லடா என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இதேபோன்று நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 9 பேர் பலியாகி உள்ளனர். 8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. இந்நிலையில்...

வியாழன், 7 பிப்ரவரி, 2013

2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே,,,

  பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும் எஸ்பெரன்ஸ் பிசிமான மற்றும் பிரிடிலே பிசிமான என்ற தம்பதியரின் பாலகனே இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இதே பெற்றோரின் 8 வயது சிறுவன் வளர்ப்பு வீட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட நிலையில்...

ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும்

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை". பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல். சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்...

துனிசியாவின் எதிர்கட்சி தலைவர் படுகொலை

மத்திய கிழக்கு நாடான துனிசியாவின் தலைநகர் டுனிஸ்ஸில் நேற்று, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சொக்ரி பெலாயிட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துனிசியாவின் இடதுசாரி ஜனநாயக தேசப்பற்று இயக்கத்தின் செயலாளரான இவர், தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. துனீசியாவில் முன்னால் ஜனாதிபதி பென் அலி என்பவர் 2011ம் ஆண்டு தொடக்கத்தில்...

புதன், 6 பிப்ரவரி, 2013

8 மாதக் குழந்தை டெங்கினால் மரணம்,,,,

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அஷ்ஷ_ஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத் என்ற 8 மாதக் குழந்தை ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 8மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமையற்தொழிலில் ஈடுபடும்...

ரஷ்யாவில் கடும் பனிப் பொழிவு!

ரஷ்யாவின், தலைநகர் மொஸ்கோவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 216 சென்டிமீட்டர் அளவு பனி பொழிந்துள்ளது. இது கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 1.5 மடங்கு அதிகமாகும். பனிப்பொழிவால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 3500 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிற்பதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது மொஸ்கோ நகருக்கும் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட் நகருக்கும் இடையேயான...

எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார். இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில்...

பிரான்ஸ் விசா பெற முயன்ற இலங்கையர் இருவர் தமிழ்நாட்டில் கைது

தமிழ்நாடு, புதுவையில் பிரெஞ்சு தூதரகத்தில் பொய்யான பாஸ்போர்ட்டை அளித்து இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல வீசா அனுமதி கேட்பதாக தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார். இலங்கையைச் சேர்ந்த ஆண் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில்...

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்தமைக்கான தடயங்கள்

கிழக்கில் ஆதிகாலத்தில் தமிழினம் வாழ்ந்த தடயங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுக்கள தற்போதும் காணப்பட்டு வருகின்றன. இவை ஒருபுறமிருக்க தற்போது கிழக்கின் பல பாகங்களுக்கும் தெற்கிலுள்ள குழு ஒன்று இரகசியமான முறையில் ஆதிகால தடயங்களை கண்டு கொள்வதற்காக தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்கியுள்ளது. அதற்கு தமிழினத்தின் சிலரும் உறுதுணையாக அமைகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும். தழிழர்கள் வாழ்ந்து வந்த பாரிம்பரிய பண்டைய இடங்களில் ஆதிவாசிகளான தமது பெரும்பான்மை...