siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

சுன்னாகத்தில் 28 ஆம் திகதி பொலிஸாரின் நடமாடும் சேவை

 _
25.07.2012.சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை தொலைத்தவர்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகள் செய்தல் ,வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பயிற்சிகள், மருத்துவ சேவை உட்பட பல்வேறு சேவைகளும் இடம் பெறவுள்ளன.

உடுவில் பிரதேச செயலகத்தைச சேர்ந்த ஜே.185 உடுவில் மத்தி வடக்கு ஜே.186 உடுவில் வடக்கு ஜே.195 சுன்னாகம் வடக்கு ஜே.196 சுன்னாகம் தெற்கு ஜே.197 சுன்னாகம் கிழக்கு ஜே. 198 சுன்னாகம் மத்தி ஜே.199 சுன்னாகம் மேற்கு ஜே. 200 கந்தரோடை ஜே. 202 ஏழாலை தென்மேற்கு கிரம அலுவலர் பிரிவுகளைச் சோந்த மக்களைக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

0 comments:

கருத்துரையிடுக