siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

பிரிட்டனில் 7 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்

31.07. 2012,
பிரிட்டனில் குழந்தைகள் சிறுவயது முதலே போதைக்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக பிரிட்டனில் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான காரணம் குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
சிறுவர்கள் இன்ப உலகில் மிதப்பதற்காக போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழக்கம் 7 வயதிலிருந்தே தொடங்கி விடுகிறது. அப்போது கேன்னபிஸ் எனப்படும் ஒரு வகை போதை செடியை சிகரெட் போன்று வடிவமைத்து அவற்றை புகைக்கின்றனர்.
அதிலிருந்து படிப்படியாக முன்னேறி 9 வயதில் கோகைன், எஸ்டாசி போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் அளவு முன்னேறுகின்றனர். 7 வயதில் தொடங்கும் இந்த பழக்கம் 56 வயது வரை தொடர்கிறது.
கோகைன், எஸ்டசி, கேன்னபிஸ் போன்ற போதைப் பொருட்கள் சமூக விரோதிகளிடமிருந்து பள்ளிகளிலேயே தாராளமாக கிடைக்கிறது. அதனால்தான் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணித்து போதைப் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக