siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தின் கித்துள் காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடைய சாமித்தம்பி கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி நெல் உலர்த்தும் தொழில் புரிவதற்காக கித்துள் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில் மீன் பிடிப்பதற்காக தனது சக தொழிலாளியுடன் காட்டு வழியாக செற்ற வேளை யானை துரத்தியுள்ளது.
இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக