siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்

 
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ். அரியாலையின் முள்ளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ் வாள்வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குறிப்பிட்டார்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் தீவிர தேடுதலில் பொலிஸார் அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக