siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

துப்பாக்கி சூடு: இராணுவ வீரர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
கனடாவில் உள்ள பிராண்டன் நகரத்துக்கு அருகே மணிடோபாவின் தென்மேற்கில் உள்ள ஷைலோவில் ராணுவத்தளம் உள்ளது. இங்கு கிளாரென்ஸ் ஸ்டில் மேன் என்பவர் இரண்டு முறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார் என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறி்த்து இராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கப்டன் கிளாரென்ஸ் ஸ்டில்மேன் இரண்டுமுறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார், நான்குமுறை துப்பாக்கியை கவனமற்ற முறையில் பயன்படுத்தினார்.
மேலும், ஒரு முறை ஆபத்தான நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்று அவர்மீது வழக்குகள் பதிவாயின.
இது தவிர வேறு விபரங்கள் எதுவும் இராணுவத்தால் தரப்படவில்லை

0 comments:

கருத்துரையிடுக