siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 31 ஜூலை, 2012

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனு பிரணாப் முகர்ஜியிடம்..!

 
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதித்துள்ள பேரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர்.
இம்மூவரின் மரதண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர் தேசங்களிலும் ஒலித்து வருகின்றது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான புதிய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மேசைக்கு குறித்த மூவரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளும் இந்திய அரசாங்கத்தின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே கதைத்துள்ளேன். பொதுவாக நான் மரணதண்டனைக்கு எதிரானவன் பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து எனது கோரிக்கையை எமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக